கடந்த ஆண்டில் அரசாங்கத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டம் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம் வாக்கு மூலம் பதிவு செய்யப்பட உள்ளது.
2022 ஆம் ஆண்டு ஜூலை மாதம் அரச எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்களால் ஜனாதிபதி மாளிகைக்குள் நுழைந்து கண்டுபிடிக்கப்பட்ட 17.5 மில்லியன் ரூபா பணம் தொடர்பில் இவ்வாறு, கோட்டாபய ராஜபக்ஷவிடம் வாக்குமூலம் பதிவு செய்யுமாறு பொலிஸ் விசேட குற்றப் பிரிவுக்கு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த உத்தரவு தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தரப்பில் இதுவரையில் எவ்வித கருத்தும் வெளியிடவில்லை.