இலங்கைக்கு சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து விரைவில் கடன் கிடைக்கப் பெறும் என அரசாங்கம் தெரிவித்துள்ளது.
மார்ச் மாதமளவில் சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) கடன் வசதிகளை பெற்றுக்கொள்ள முடியும் என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
அதன் மூலம் நாட்டின் பொருளாதாரத்தை மீளக் கட்டியெழுப்ப முடியும் என இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.
நாடு கடுமையான பொருளாதார நெருக்கடி நிலையை எதிர்நோக்கி வரும் நிலையில் அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.