சுவிட்சர்லாந்தில் சம்பள அதிகரிப்பை வலியுறுத்தி பாரிய போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
நேற்றைய தினம் இந்த பாரிய போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
சுமார் 20000 பேர் இந்த போராட்டத்தில் பங்கேற்றனர் என தெரிவிக்கப்படுகிறது.
சம்பள அதிகரிப்பு மற்றும் ஓய்வூதிய கொடுப்பனவு என்பனவற்றை அதிகரிக்குமாறு கோரி இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
சுவிட்சர்லாந்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் இந்தப் போராட்டத்திற்காக மக்கள் குழுமி இருந்தனர் என தெரிவிக்கப்படுகிறது.
மக்கள் எதிர்நோக்கி வரும் பிரச்சனைகளுக்கு அரசாங்கம் துரித கதியில் தீர்வு திட்டங்களை வழங்க வேண்டும் என கோரப்பட்டுள்ளது.
மேலும் வீட்டுமனை துறைகளில் நிலவும் குறைபாடுகள் களையப்பட வேண்டும் எனவும் வாடகை குடியிருப்பாளர்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தொழிற்சங்க ஒன்றியம், சமூக ஜனநாயக கட்சி, பசுமைக் கட்சி மற்றும் வீட்டு வாடகை குடியிருப்பாளர் ஒன்றியம் போன்ற தரப்புகளினால் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
குறிப்பாக சம்பள அதிகரிப்பு வழங்கப்பட வேண்டும் என போராட்டக்காரர்கள் கோரியுள்ளனர்.