சுவிட்சர்லாந்தில் உற்பத்தி செய்யப்பட்ட ஆயுதங்கள் உக்கிரேனில் பயன்படுத்தப்பட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
சுவிஸ் ராணுவ வாகனங்கள் இரண்டு உக்ரைன் போரில் பயன்படுத்தப்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
யுத்த தங்கிகள் இவ்வாறு பயன்படுத்தப்பட்டமைக்கான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
இந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.
நடுநிலை வெளியுறவு கொள்கையை பின்பற்றும் சுவிட்சர்லாந்து யுத்தம் செய்யும் தரப்புகளுக்கு ஆயுதங்களை விற்பனை செய்வதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இவ்வாறான ஒரு பின்னணியில் எவ்வாறு சுவிஸ் ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டன என கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
இந்த வகை யுத்த தாங்கிகளை சுவிட்சர்லாந்து டென்மார்க்கிற்க்கு ஏற்றுமதி செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்த வாகனங்களில் ஒரு தொகுதியை டென்மார்க் ஜெர்மனிய தனியார் நிறுவனம் ஒன்றுக்கு விற்பனை செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
எனவே ஜெர்மனியில் இருந்து இந்த யுத்த வாகனங்கள் உக்கிரேனுக்கு ஏற்றுமதி செய்யயப்பட்டிருக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது.
ஜெர்மனியில் இருந்து இந்த யுத்த வாகனங்கள் உக்கிரேனுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டதா என்பது குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இது தொடர்பில் சுற்றுலா அந்த அரசாங்கம் ஜெர்மனியுடன் தொடர்பு கொண்டு உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.