நாட்டின் புதிய நிதியமைச்சர் பொறுப்பினையும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஏற்றுக்கொண்டுள்ளார்.
சர்வக்கட்சி அரசாங்கத்தின் நிதி அமைச்சு பதவி, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச முன்னிலையில், அவர் இன்று பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.
இலங்கையின் 24 ஆவது நிதி அமைச்சர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆவார் .
ரணில் சுமார் நான்கு தசாப்தங்களுக்கு மேல் அரசியலில் ஈடுபட்டு வந்த போதிலும் இதுவே அவர் முதல் தடவையாக நிதி அமைச்சு பதவியை பொறுப்பேற்றுள்ளார்.