ரஷ்யாவில் மனித உரிமை நிலைமைகள் மிக மோசமடைந்து செல்வதாக ஐக்கிய நாடுகள் அமைப்பு குற்றம் சுமத்தியுள்ளது.
ஐக்கிய நாடுகள் அமைப்பின் நிபுணர்கள் இந்த குற்றச்சாட்டை சுமத்தியுள்ளனர்.
கடந்த ஆண்டு பெப்ரவரி மாதம் உக்ரையின் மீது ரஷ்யா படையெடுத்ததை தொடர்ந்து மனித உரிமை நிலைமைகள் மோசமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ரஷ்ய அதிகாரிகள் சுதந்திரமாக மக்கள் ஒன்று கூடுவதை தடுத்துள்ளதாகவும், அமைதியான முறையில் மக்கள் தங்களது கருத்துக்களை வெளியிடுவதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாகவும், இணைய வழியிலும் பொதுவெளியிலும் கருத்து சுதந்திரம் நசுக்கப்படுவதாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
நீதிமன்றின் சுயாதீனத்தன்மை சிதைக்கப்பட்டுள்ளதாகவும் நியாயமான விசாரணை உறுதிப்படுத்தப்படவில்லை எனவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
மாற்றுக் கருத்து உடையவர்கள் முடக்கப்படுவதாக ஐக்கிய நாடுகள் அமைப்பு ரஷ்யா மீது குற்றம் சுமத்தியுள்ளது.
இந்த குற்றச்சாட்டுகள் தொடர்பில் ரஷ்ய ராஜதந்திர வட்டாரத்திலிருந்து இதுவரை எவ்வித பதிலும் வெளியிடப்படவில்லை.