விமான கட்டணங்களை குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என விமான சேவை நிறுவனம் தெரிவித்துள்ளது.
விமான சேவை நிறுவனத்தின் பிரதம நிறைவேற்ற அதிகாரி டயட்டர் பிராங்கெட் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
சர்வதேச ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
கோவிட் பெருந்தொற்று, பணிப்புறக்கணிப்பு போராட்டங்கள் மற்றும் ஆளணிவள பற்றாக்குறை போன்ற காரணிகளினால் கடந்த காலங்களில் விமான டிக்கெட்களுக்கான கேள்வி அதிகரித்திருந்தது என தெரிவித்துள்ளார்.
இந்த ஆண்டில் விமான பயணங்கள் உரிய நேரத்தில் முன்னெடுக்கப்படவில்லை எனவும் பயண பொதிகள் தொடர்பான பிரச்சினைகள் காணப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
எனினும் எதிர்வரும் ஆண்டில் பயண கட்டணங்களை குறைக்க முடியும் எனவும் உரிய நேரத்திற்கே விமான சேவைகளை முன்னெடுக்க முடியும் எனவும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.