சுவிட்சர்லாந்தில் வீதியில் கிடந்த 20 ஆயிரம் சுவிஸ் பிராங்க் பணத்தை உரிமையாளரிடம் ஓர் தம்பதியினர் ஒப்படைத்துள்ளனர்.
வயோதிபர் ஒருவர் வங்கியில் பணம் பெற்று கொண்டு வீடு திரும்பும் போது அவற்றை தவற விட்டுள்ளார்.
தவறவிடப்பட்ட பணம் வீதியில் கிடப்பதனை கண்ட தம்பதியினர் அந்தப் பணத்தை உரிய நபரிடம் ஒப்படைத்துள்ளனர்.
சுவிட்சர்லாந்தின் தென்பகுதி நகரமான மார்க்கிங் நகரில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
வீட்டுக்கு சென்று பார்த்த போத தனது பணம் காணாமல் போயிருந்ததை குறித்த வயோதிபர் கண்டுள்ளார்.
யாரோ பணத்தை களவாடி விட்டனர் என அஞ்சி வருத்தமடைந்துள்ளார்.
எனினும் குறித்த தம்பதியினர் பணப்பையில் இருந்த குறித்த நபரின் முகவரியை தெரிந்து கொண்டு அவரது வீட்டுக்கே சென்று பணத்தை ஒப்படைத்துள்ளனர்.
இவ்வாறு பெருந்தொகை பணத்தை மீள ஒப்படைத்தமைக்கு நன்றி பாராட்டும் வகையில் குறித்த முதியவர் அந்த தம்பதியினருக்கு 500 ஸ்விஸ் பிராங்க்களை சன்மானமாக வழங்கியுள்ளார்.